tamilni 366 scaled
இலங்கைசெய்திகள்

குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

Share

குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கிய இணையவழி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் குற்றவாளிகளான ‘ஹீனடியன மகேஸ் மற்றும் ‘மத்துகம சான்’ எனப்படும் சான் அரோஸ் லியனகே ஆகியயோருக்கு கடவுச்சீட்டு வழங்கியதாக கூறப்படும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வவுனியா நீதவான் நீதிமன்றிலும் மற்றைய சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...