14 31
இலங்கைசெய்திகள்

யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு

Share

யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது.

இலங்கையின் அரசால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை (JIA) விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.

எனினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்படவில்லை.

போட்டித்தன்மை காரணமாக இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களை கோரியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரையில் விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையக் கட்டிடத்தை கட்டி முடிக்கும் இந்த திட்டமானது, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.

பிரதான முனைய கட்டிடம், உயரமான சாலை போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 29ம் திகதியன்று முடிவடைகிறது.

சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு சாத்தியக்கூறு ஆய்வையாவது மேற்கொண்ட விமான நிலைய ஆலோசனை நிறுவனங்கள் அல்லது கூட்டு முயற்சிகளில் இருந்து விலை மனுக் கோரப்பட்டது.

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...