18 5
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்

Share

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் மற்றும் லொகு பெட்டி ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பெலாரஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான தகவல்களை அடுத்து வரும் நாட்களில் பெலாரஸ் அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஞ்சிபான இம்ரான் மற்றும் லோகு பெட்டி ஆகியோருடன் அமில ரோடும்பாவும் கைது செய்யப்பட்டு பெலாரஸில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலாரஸ் நாட்டுக்குள் நுழைய அவர்கள் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.

அவர்களை நாடு கடத்துவதற்கு பெலாரஸ் அரசாங்கம் அனுமதித்தால் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் செய்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மற்றும் பெலாரஸ் நாட்டிற்கு இடையில் சர்வதேச உறவுகள் இல்லாததால், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது இன்னும் துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.

லொக்கு பெட்டி ஒரு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி மற்றும் கஞ்சிபான இம்ரானுக்கு முன்னர் வழங்கப்பட்ட சிவப்பு பிடியாணை இரத்து செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதே காரணமாகும்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பெலாரஸில் கஞ்சிபான இம்ரானுக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...