18 5
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்

Share

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் மற்றும் லொகு பெட்டி ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பெலாரஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான தகவல்களை அடுத்து வரும் நாட்களில் பெலாரஸ் அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஞ்சிபான இம்ரான் மற்றும் லோகு பெட்டி ஆகியோருடன் அமில ரோடும்பாவும் கைது செய்யப்பட்டு பெலாரஸில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலாரஸ் நாட்டுக்குள் நுழைய அவர்கள் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.

அவர்களை நாடு கடத்துவதற்கு பெலாரஸ் அரசாங்கம் அனுமதித்தால் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் செய்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மற்றும் பெலாரஸ் நாட்டிற்கு இடையில் சர்வதேச உறவுகள் இல்லாததால், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது இன்னும் துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.

லொக்கு பெட்டி ஒரு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி மற்றும் கஞ்சிபான இம்ரானுக்கு முன்னர் வழங்கப்பட்ட சிவப்பு பிடியாணை இரத்து செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதே காரணமாகும்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பெலாரஸில் கஞ்சிபான இம்ரானுக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...