prison jail cell 2
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி சிறைச்சாலையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள்: அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் பரபரப்பு!

Share

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் இன்று தப்பியோட முயன்ற நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து அவர்கள் மீண்டும் பிடிபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பாதுகாப்பிலிருந்த அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு அவர்களைத் தடுக்கும் பொருட்டு வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் அச்சமடைந்த குறித்த இரு கைதிகளும், தப்பியோடும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே ஓடி வந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது தப்பியோட முயன்ற கைதிகள் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிகிச்சைக்காகச் சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காலி சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...