நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு 151 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மை கிடைக்கப் பெற்றிருந்தது.
அதற்கு மேலதிகமாக ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மேலும் 49 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 27 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.இலங்கை விடுதி
ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளமுடியவில்லை.
அதேநேரம், சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புகள் 12 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.