21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

Share

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு 151 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மை கிடைக்கப் பெற்றிருந்தது.

அதற்கு மேலதிகமாக ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மேலும் 49 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 27 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.இலங்கை விடுதி

ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளமுடியவில்லை.

அதேநேரம், சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புகள் 12 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...