21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

Share

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு 151 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மை கிடைக்கப் பெற்றிருந்தது.

அதற்கு மேலதிகமாக ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மேலும் 49 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 27 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.இலங்கை விடுதி

ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளமுடியவில்லை.

அதேநேரம், சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்புகள் 12 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 4
இலங்கைசெய்திகள்

மோதிவிட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் : பொலிஸார் வலை வீச்சு

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா சுரங்கப்பாதையில் குடிபோதையில் பயணி ஒருவரை மோதிவிட்டு...