செய்திகள்இலங்கை

தினமும் இரு மணி நேர மின்வெட்டே தீர்வு!!

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
Share

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலமும் இரு மணித்தியாலங்களும் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இல்லையெனில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டை தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 60 வீதமாக குறைந்துள்ளதாகவும் அது 40 வீதத்திற்கு குறைந்தவுடன் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எரி பொருளை வாங்குவதற்கு கிடைக்காததாலும் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களில் அவசர கொள்முதலில் அதிக விலைக்கு மின்சாரம் பெற முடியாததால் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இப்படியே தொடர்ந்தால் அடுத்த மூன்று நான்கு வாரங்களுக்கு தினமும் 7 முதல் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...