27 12
இலங்கைசெய்திகள்

அநுர அரசில் மீண்டும் விசாரிக்கப்படும் பாரதூரமான கொலைகள் மற்றும் மோசடிகள்

Share

அநுர அரசில் மீண்டும் விசாரிக்கப்படும் பாரதூரமான கொலைகள் மற்றும் மோசடிகள்

கடந்த இரண்டு தசாப்தங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படாமை குறித்த மீண்டும் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் மேற்கொண்ட முறைகேடுகள் குறித்து ஆராயப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆதாரங்களை மறைத்தல், விசாரணைக் கோப்புகளை முறையற்ற முறையில் தயாரித்தல் போன்றவற்றிலும் முதன்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது மறைக்கப்பட்ட பல இரகசியங்களை அம்பலப்படுத்தும் நோக்கில் பல கோப்புக்களை அநுர அரசாங்கம் மீண்டும் தூசு தட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...