32 3
இலங்கைசெய்திகள்

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

Share

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முறையான வேலை வாய்ப்புகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைப் பாத்திரங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் பல்வேறு இணைய மோசடி நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதும், தாய்லாந்தில் (Thailand) உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஐ.எம்.ஓ தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு கடத்தப்பட்டோரை மீட்பதற்காக இலங்கையில் உள்ள ஐ.எம்.ஓ குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம், கடத்தல்காரர்களால் நடத்தப்படும் இணையக் குற்றச் செயல்களில் அடிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாதிக்கப்பட்டவர்களின் மோசமான நிலைமையை அதிகாரிகளின் கவனத்திற்குத் தொடர்ந்து கொண்டு வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

இலங்கை, தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள அதன் இராஜதந்திர தூதரகங்கள், பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு – இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை சுமூகமாக திரும்பும் செயல்முறையை உறுதி செய்வதில் வழக்கமான இடப்பெயர்வை ஊக்குவிக்க அனைத்து கூட்டாளர்களுடனும் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஐ.எம்.ஓ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...