12 18
இலங்கைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு மோசடி குறித்து எச்சரிக்கை

Share

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கையின் தொலைக்காட்சிப் பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் லஹிரு முதலிகே மற்றும் ஹரிந்திர ஜெயலால் ஆகியோர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்னர்.

தங்களைப் போல குரலை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுநோய் நோயாளர்களுக்காக நிதி திரட்டும் பெயரில் நடைபெறும் மோசடியை பொதுமக்கள் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

என்னுடைய புகைப்படத்துடன் WhatsApp கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டு, கடந்த நாட்களில் தம்முடன் பேட்டி நடத்திய தொழிலதிபர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக லஹிரு முதலிகே தெரிவித்துள்ளார்.

அவர்கள் சொல்வது போல, அந்த நபர் என் குரலிலேயே பேசியதாகவும், எனது உண்மை குரலைப் போலவே இருந்ததாகவும் கூறியுள்ளனர். இது AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருக்கலாம் என சந்தேகமுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல தொழிலதிபர் ரூ. 500,000 வழங்கத் தயாராக இருந்த நிலையில், அவரின் செயலாளர் உண்மை தெரியாமல்தான் தொலைபேசி அழைப்பை உறுதிப்படுத்த முயன்றதில்தான் இந்த மோசடி பெரிதாக பரவாமல் தவிர்க்கப்பட்டது.இதுபோன்ற 10–15 புகார்கள் கிடைத்துள்ளதாக முதலிகே தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஹரிந்திர ஜெயலால் அவர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். நாம் எவ்வளவு கவனத்துடன் வாழ்ந்தாலும், இந்த மாதிரியான பொய்யான நபர்கள், நம்மை மட்டுமல்ல, பலர் வாழ்க்கையையும் பாதிக்கிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்வதற்கான திட்டமும் அவர் தெரிவித்தார்.

போலியாக நிதி திரட்டும் மோசடிகளை தவிர்க்க வேண்டிய வழிகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

1. பணம் வழங்கும் முன் உறுதிப்படுத்துங்கள்: நன்கொடை கோரும் நபரை நேரடியாக உறுதிப்படுத்தி தொடர்புகொள்க.

2. அறிமுகமில்லாத எண்களை தவிருங்கள்: தெரிந்த நபர்களிடமல்லாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.

3. AI குரல் மோசடிகளை எச்சரிக்கையாக கவனிக்கவும்: உண்மையானது போல் தோன்றும் அழைப்புகளுக்கும் நம்பிக்கையுடன் பதிலளிக்க வேண்டாம்; தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துங்கள்.

4. தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: அடையாள அட்டைப் பதிவுகள், வங்கி விவரங்கள் போன்றவற்றை உறுதி செய்யப்படாத அழைப்புகளில் பகிர வேண்டாம்.

5. சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை முறைப்பாடு செய்யவும்: உங்கள் பகுதி பொலிஸ் நிலையம் அல்லது இணைய குற்றப்புலனாய்வு பிரிவைத் தொடர்புகொள்க.

6. உறுதியான தகவல்களை பகிரவும்: பாதிக்கப்பட்ட நபர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும்.

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு மூலமான மோசடிகள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...