images 1 2
இலங்கைசெய்திகள்

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் : யன்னல் வழியாக கீழே குதித்த மக்களால் பரபரப்பு

Share

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் உயிரை காப்பாற்ற பொதுமக்கள் ஜன்னல், பால்கனி வழியாக கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரமான மர்மாரிஸ் இன்று (03) அதிகாலையில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கட்டிங்கள் குலுங்கிய நிலையில் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் மேலும் சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் மற்றும் பால்கனி வழியாக வெளியே குதித்துள்ளனர்.

இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில், துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 53,000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...