6 83
இலங்கைசெய்திகள்

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

Share

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கு சுனாமி பேபி 81 என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் அஞ்சலி செலுத்தினார்.

மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்தினருடன் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலப்பட்டது.

இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக ”சுனாமி பேபி 81”எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.

இந்தக் குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.

இக்குழந்தை எங்களுடையது என ஒன்பது தாய்மார் போராடிய நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகிய பின்னர் அந்த குழந்தை குறித்த தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.

இந்த நிலையில் 20 வயதுடைய அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது பெற்றோருடன் அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...