6 83
இலங்கைசெய்திகள்

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

Share

ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கு சுனாமி பேபி 81 என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் அஞ்சலி செலுத்தினார்.

மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்தினருடன் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலப்பட்டது.

இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக ”சுனாமி பேபி 81”எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.

இந்தக் குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.

இக்குழந்தை எங்களுடையது என ஒன்பது தாய்மார் போராடிய நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகிய பின்னர் அந்த குழந்தை குறித்த தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.

இந்த நிலையில் 20 வயதுடைய அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது பெற்றோருடன் அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...