25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

Share

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் சமீபத்தில் பகிர்ந்த பதிவொன்று அரசியல் மற்றும் ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அந்த பதிவில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்றும், தற்போது அவக்கு பதிலாக ஒரு க்ளோன் அல்லது இயந்திர மனிதன் செயல்பட்டு வருகிறான் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கருத்தை மற்றொருவர் எழுதியிருந்ததை ட்ரம்ப் தன் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம், அதை உலகக் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த வகை கூற்றுகள் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்லாமல், பொது மக்களை தவறாக வழிநடத்தும் அபாயமும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இதைப் போன்ற சதி கோட்பாடுகளை பரப்புவது, ட்ரம்பின் பழைய அரசியல் நடைமுறையின் தொடர்ச்சியாகும் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் அவர் 2020 தேர்தலில் தான்தான் வென்றதாகவும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிறப்பிடம் குறித்தும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் பரப்பியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

இந்த வகையான தகவல்கள் சமூக நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இவை அவசியமற்ற குழப்பங்களையும் சமுதாயப் பிளவுகளையும் உருவாக்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசியலில் ஏற்கெனவே தவறான தகவல்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் சூழலில், ட்ரம்ப் மேற்கொண்ட இந்த செயல் மேலும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...