7 32
இலங்கைசெய்திகள்

பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

Share

பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald trump) சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் (Pennsylvania) மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி சார்பில் அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜூலை 13-ஆம் திகதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் டிரம்பின் காதில் பட்டது. ட்ரம்ப் திரும்பாமல் இருந்திருந்தால், துப்பாக்கி குண்டுகள் நேராக அவரது தலையில் சென்றிருக்கும். எனவே அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “நான் சமீபத்தில் சுடப்பட்ட இடத்தில் பேரணி நடத்தப் போகிறேன். எங்கள் அன்பிற்குரிய தீயணைப்பு வீரர் கோரியின் நினைவாக மாபெரும் பேரணியை நடத்த உள்ளேன்.

இதற்காக பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் செல்கிறேன். இந்த பேரணியின் முழு விவரம் விரைவில் தெரியவரும். விவரங்களுக்கு காத்திருங்கள்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...