7 32
இலங்கைசெய்திகள்

பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

Share

பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணி: டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald trump) சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் (Pennsylvania) மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி சார்பில் அமெரிக்க(USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜூலை 13-ஆம் திகதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் டிரம்பின் காதில் பட்டது. ட்ரம்ப் திரும்பாமல் இருந்திருந்தால், துப்பாக்கி குண்டுகள் நேராக அவரது தலையில் சென்றிருக்கும். எனவே அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்நிலையில் பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “நான் சமீபத்தில் சுடப்பட்ட இடத்தில் பேரணி நடத்தப் போகிறேன். எங்கள் அன்பிற்குரிய தீயணைப்பு வீரர் கோரியின் நினைவாக மாபெரும் பேரணியை நடத்த உள்ளேன்.

இதற்காக பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் செல்கிறேன். இந்த பேரணியின் முழு விவரம் விரைவில் தெரியவரும். விவரங்களுக்கு காத்திருங்கள்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....