24 6614d4234119f
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி கிடைப்பதில் சிக்கல்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதி கிடைப்பதில் சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நீடிக்கப்பட்ட நிதி வசதி, எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் கிடைப்பதில் தடைகள் தொடர்கின்றன.

பத்திரப்பதிவுதாரர்கள் உட்பட கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கைகளை எட்டுவதற்கான கால அவகாசத்திலேயே, இன்னும் இலங்கைக்கு கடின நிலை தொடர்கிறது.

திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வின் பின்னர் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு அடுத்த 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னர், இருதரப்புக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாரிஸ் கிளப் நாடுகளுடன் இலங்கை கையெழுத்திட வேண்டும்.

இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் ஆணையம் ஜூன் மாத இறுதிக்குள் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிப்பது அரசாங்கத்திற்கு இன்னும் சவாலாக உள்ளது. 2022 ஏப்ரலில் இலங்கை திவாலானதாக அறிவித்தது, அதன் பின்னர் நாடு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தத் தவறிவிட்டது.

ஒப்பந்தங்களின்படி, முதல் ஆறு ஆண்டுகளுக்குள் 37 சதவீத கடன்களையும், 6-20 ஆண்டுகளுக்குள் 51 சதவீதத்தையும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீதமுள்ள 12 சதவீதத்தையும் தீர்க்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...