13
இலங்கைசெய்திகள்

படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

Share

படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார்.

முப்படையினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு தமது அரசாங்க ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்க்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் படையினர் கோரி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போதைய அரசாங்கம் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

படையினரின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...