6 1
இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டில் திறைசேரி பதிவு செய்யப்போகும் சாதனை: ஜனாதிபதி உறுதி

Share

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருமானம் ஈட்டும் ஆண்டாக 2025ஆம் ஆண்டை திறைசேரி பதிவு செய்யும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதத்தில் உள்நாட்டு இறைவரி திணைக்களம், எதிர்பார்த்த வருமான இலக்குகளை தாண்டியுள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சுங்கத் திணைக்களம், அதன் வருமான இலக்குகளை தாண்டியுள்ளது.

வரிப் பணம் தவறாகப் பயன்படுத்தப்படாது. அனைத்து வரிப் பணத்தையும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்.

வணிகங்கள் செழிக்க அரசாங்கம் உதவும் அதேவேளையில் நியாயமான வரிகள் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த சில மாதங்களாக நிலையான மாற்று விகிதத்தை பராமரித்து, வட்டி விகிதங்களை 10 சதவீதத்திற்கு கீழ் குறைத்து, அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...