10 30
இலங்கைசெய்திகள்

சக்திவாய்ந்த புதையல் தோண்டும் இயந்திரத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல்

Share

சக்திவாய்ந்த புதையல் தோண்டும் இயந்திரத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல்

முல்லைத்தீவு(Mullaitivu) மான்குளம் அருகே நவீன கார் ஒன்றுடன் சக்திவாய்ந்த புதையலைக் கண்டறியும் இயந்திரமொன்றையும் இன்னும் சில கருவிகளையும் கைவிட்டு தப்பிச் சென்ற கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மான்குளம், கனகராயன்குளம் அருகே மர்ம நபர்கள் கும்பல் ஒன்று புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மாலை தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது புதையல் தோண்டுவதற்கான சக்திவாய்ந்த மெட்டல் டிடெக்டர், மடிக்கணனி ஒன்று, உள்ளிட்ட உபகரணங்களுடன் கார் ஒன்றையும் கைவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றிருந்தது.

காரையும், குறித்த உபகரணங்களையும் கைப்பற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளைகளின் பின்னர் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கலன்பிந்துவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...