tamilni 32 scaled
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் சிக்கியுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கதறியழுத தாய்

Share

மியன்மாரில் சிக்கியுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கதறியழுத தாய்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்பலகமுவ பிரதேசத்தில் ஜனாதிபதி நேற்று (02) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் சிக்கியுள்ள தனது மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் தாய் ஒருவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,

மியன்மார் அரசுடன் எல்லோரும் பேசுகின்றார்கள்… . இவர்கள் மியன்மாரில் எங்கு சிக்கிக் கொண்டார்கள் என்பதில் மியன்மார் அரசுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. பயங்கரவாத குழு அவர்களை அழைத்துச் சென்றுள்ளது.

இலங்கையர்கள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மியன்மார் வெளியுறவு அமைச்சரிடம் எமது அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், தாய்லாந்து எல்லைக்கு அருகே மியன்மாரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்துடனும் பேசினோம்.” “நாங்கள் அந்த இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி வருகின்றோம். தாய்லாந்தின் உதவியைப் பெற உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...