18 6
இலங்கைசெய்திகள்

ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த டிரான் அலஸ்

Share

ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த டிரான் அலஸ்

இலங்கை அரசாங்கம், VFS குளோபல் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள, மூன்றாம் தரப்பு (அவுட்சோர்சிங்) விசா செயல்முறை ஒப்பந்தத்தை, கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த, ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான குழு (COPF), இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அல்லது அதன் திருத்தத்தை பரிந்துரைத்திருந்தது.

எவ்வாறாயினும், COPF குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அனுமதியின்றி அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது,

அத்துடன், இலங்கை அரசாங்கம் VFS உடன்படிக்கையில் ஒரு ரூபாவைக்கூட செலவழிக்கவில்லை என்றும் நட்டம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

“விஎஃப்எஸ் ஒப்பந்தம் தொடர்பான சில கதைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட நலனுக்காக சிலரால் புனையப்பட்டவை.

எனவே, VFS ஒப்பந்தத்தில் அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாரிய மோசடி நடந்துள்ளதாக கூறுபவர்களுக்கு, தாம் சவாலை விடுப்பதாகவும், யாராவது உண்மையான புள்ளிவிபரங்களுடன் வந்தால், அதற்கு தாம் பொறுப்பு என்றும அமைச்சர் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...