tamilni 340 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து

Share

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09.2023) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தே கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் தொடருந்து இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து செல்லும் பயணிளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக தொடருந்து பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...