இலங்கைசெய்திகள்

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share
16 5
Share

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற மாணவன், வீடற்ற நபராக வீதி ஓரத்தில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பிபிசி ஆவணப்படத்தின் அடிப்படையில் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் குறித்த மாணவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

ஹன்னா மற்றும் நியால் ஆகிய இரண்டு அதிகாரிகள், இந்த மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட போது ,அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள மாமாவின் உதவியுடன் பிரித்தானியாவுக்கு வந்த நிலையில், தற்போது இலங்கையில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மாமா உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கான நிதி உதவியை செய்ய யாரும் இல்லாத நிலையில் வாகனம் நிறுத்துமிடத்தில் வசிப்பதாக நதீர குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சென்று வரும் போதும், தனக்காக யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஓரத்தில் தங்கியிருக்கும் வேளையில், அந்தப் பகுதியிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிபிசி காணொளியை பார்வையிட்ட சிலரினால் நதீரவுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இலங்கை மாணவனுக்கு தங்குமிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர வேலையும் ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...