16 5
இலங்கைசெய்திகள்

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற மாணவன், வீடற்ற நபராக வீதி ஓரத்தில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பிபிசி ஆவணப்படத்தின் அடிப்படையில் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் குறித்த மாணவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

ஹன்னா மற்றும் நியால் ஆகிய இரண்டு அதிகாரிகள், இந்த மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட போது ,அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள மாமாவின் உதவியுடன் பிரித்தானியாவுக்கு வந்த நிலையில், தற்போது இலங்கையில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மாமா உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கான நிதி உதவியை செய்ய யாரும் இல்லாத நிலையில் வாகனம் நிறுத்துமிடத்தில் வசிப்பதாக நதீர குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சென்று வரும் போதும், தனக்காக யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஓரத்தில் தங்கியிருக்கும் வேளையில், அந்தப் பகுதியிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிபிசி காணொளியை பார்வையிட்ட சிலரினால் நதீரவுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இலங்கை மாணவனுக்கு தங்குமிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர வேலையும் ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...