15 3
இலங்கைசெய்திகள்

26 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

Share

2025 ஆம் ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Srilanka) வருகை தந்துள்ளனர்.

இங்கிலாந்து (England), ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இந்த விடயம் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனவரி 26, 2025 வரை இலங்கை 212,838 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த எண்ணிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 208,253 வருகைகளை மிஞ்சியுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி இரண்டாவது வாரத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 57,473 வருகைகளும், முதல் வாரத்தில் 54,853 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...