rtjy 304 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Share

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் தினசரி சராசரி வருகை 3,534 ஆக பதிவாகியுள்ளதுடன் இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது முன்னேற்றத்தை காண்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் மொத்தம் 23,073 சுற்றுலாப்பயணிகளும், இரண்டாவது வாரத்தில் 23,434 இதே எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் இன்னும் அதிகரித்து 31,265 ஆக பதிவாகியுள்ளது.

ஆனால், ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்த 147,789 சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கில் 53 சதவீத வருகையையே இலங்கை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களைப் போலவே, இம்மாதமும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26 சதவீத பங்களிப்பை வழங்கி இந்தியா முதலிடத்தையும் 9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தினை ரஷ்யாவும், 8 சதவீத பங்களிப்புடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் நிலையிலும் உள்ளது.

மேலும், குறித்த வரிசையில் ஜெர்மனி, சீனா, அவுஸ்திரேலியா, மாலைதீவுகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...