24 66383a771095d
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இலவச சுற்றுலா விசா நடைமுறை

Share

இலங்கையில் இலவச சுற்றுலா விசா நடைமுறை

நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இலவச சுற்றுலா விசாக்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க(Chandima Wickramasinghe) தலைமையில், இந்தக் குழுவில் சுற்றுலா, குடிவரவு, பாதுகாப்பு மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா மற்றும் தொடர்புடைய தொழில்களில் அவற்றின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இலவச சுற்றுலா விசா திட்டங்களின் சர்வதேச மாதிரிகளை ஆய்வு செய்வது குழுவின் ஆணையில் அடங்கும்.

அத்தோடு உறுப்பினர்கள் மற்ற நாடுகளில் வெற்றிகரமான நடைமுறைகளை பகுப்பாய்வு செய்வார்கள் மற்றும் இலங்கைக்கான அவற்றின் சாத்தியமான நன்மைகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பீடு செய்வார்களென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சுற்றுலாத்துறை சங்கங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய இந்த குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) விரிவான பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...