24 662f5875c8e00
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

Share

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த 25 நாட்களுக்குள் 121,595 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 757,379ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் 25 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 18 வீத இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 21,324 ஆகும்.

இது தவிர, ரஷ்யாவிலிருந்து 12,807 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 11,626 சுற்றுலாப்பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 8,565 சுற்றுலாப்பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...