24 665d18832e659
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

Share

அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல், மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி சந்தையில் மரக்கறிகளின் விலை 400 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைக் கோஸ் 60 – 80 ரூபா, கரட் 110 -130 ரூபா, லீக்ஸ் 350 – 370 ரூபா, ராபு 80 – 100 ரூபா, இலையுடன் பீட்ரூட் 220 – 240 ரூபா, இலையில்லா பீட்ரூட் 320 – 340 ரூபா, உருளைக் கிழங்கு 210 – 230 ரூபா, உருளை கிழங்கு சிவப்பு 200 – 220 ரூபா, நோக்கோல்100 – 120 ரூபா என விற்பனை, கொள்வனவு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 2300 – 2400 ரூபா, ஐஸ்பேர்க் 3500 – 3600 ரூபா, சலட் இலை1700 – 1800 ரூபா, ப்ரக்கோலி 1500 – 1600 ரூபா, கோலிப்ளவர் 1500 – 1600 ரூபா என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...