24 66076b876579e
இலங்கைசெய்திகள்

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

Share

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று (29) கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சில வியாபாரிகள் தூக்கி எறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

மேலும், வெங்காய இலை 80 ரூபாய், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாய், மக்காச்சோளம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் 100 ரூபாய், தக்காளி கிலோ 120, பூசணி 120 ரூபாய், போஞ்சி கிலோ 100, வெண்டைக்காய் கிலோ 140, கரட் 150, முட்டைகோஸ் கிலோ 150, பச்சை மிளகாய் கிலோ 150, ஒரு கிலோ மீன் மிளகாய் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 1300 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (29) பேலியகெட மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மீன் சந்தை வர்த்தக நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலம் நெருங்கும் போது மீன்களின் விலை அதிகரிப்பது வழக்கம் என்றும் சாலயா மொத்த விற்பனை 550 ரூபாவாகவும், லின்னா 750 ரூபாவாகவும், ஹுருல்லா 750 ரூபாவாகவும், பலாயா 650 ரூபாவாகவும், கெலவல்லா 900 ரூபாவாகவும், தலபட் 1400 ரூபாவாகவும், பாராவோ 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ தோரா 1200 ரூபாவாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோ கும்பலாவ 800 ரூபாவுக்கும், இறால் கிலோ 2000 ரூபாவுக்கும், கணவாய் கிலோ 1200 ரூபாவுக்கும், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...