இலங்கைசெய்திகள்

200 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்

19 3 scaled
Share

200 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்

புதிதாக 200 மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அவற்றில் 15 மதுபானசாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (19.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஆறு மதுபான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் அரசாங்கம் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக செயற்படவில்லை எனவும் சரியான முறையில் கேள்வி எழுப்பினால் முழுமையான பதில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில் தமது அரசாங்கம் இவ்வாறான அனைத்து சட்டவிரோத உரிமங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும். அத்துடன் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை குறிவைத்து மதுபான உரிமம் வழங்குவது தவறானது இது தொடர்பாக அரசாங்கம் உரிய தகவலை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...