19 3 scaled
இலங்கைசெய்திகள்

200 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்

Share

200 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் திட்டம்

புதிதாக 200 மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அவற்றில் 15 மதுபானசாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (19.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஆறு மதுபான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் அரசாங்கம் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக செயற்படவில்லை எனவும் சரியான முறையில் கேள்வி எழுப்பினால் முழுமையான பதில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில் தமது அரசாங்கம் இவ்வாறான அனைத்து சட்டவிரோத உரிமங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும். அத்துடன் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை குறிவைத்து மதுபான உரிமம் வழங்குவது தவறானது இது தொடர்பாக அரசாங்கம் உரிய தகவலை வெளியிட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...

MediaFile 5 2
இலங்கைசெய்திகள்

அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல் – பொலிஸ் இலக்கங்கள் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட...