24 665d17e957915
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு

Share

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை ஒதுக்குமாறு ரணில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தகவல் அதிபர் ஊடகப் பிரிவு (President Media Division) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீரற்ற வானிலையால் முற்றாக சேதடைந்துள்ள அனைத்து வீடுகளையும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அரச நிதியைப் பயன்படுத்தி திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரணில் (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக காவல்துறை விசேட அனர்த்த நிவாரணப் பிரிவை நிறுவியுள்ளது.

அதன்படி, 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...