rtjy 65 scaled
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றம்

Share

தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த 17 ஆவது தேசிய மாநாடு நான்கரை வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

எனினும், அதற்கு முன்னோட்டமாகக் கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக ஜனவரி 21 ஆம் திகதி கட்சியின் பொதுக்குழு விசேடமாகத் திருகோணமலையில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று (05.11.2023) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 20ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும். அதன்போது கட்சித் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நியமனங்கள் பற்றி ஆராயப்படும்.

சுமுகமாகத் தேர்தலின்றி, இணக்கமான தீர்வுகள் ஏற்படுத்த முயற்சிகள், பேச்சுக்கள் அங்கு மேற்கொள்ளப்படும். எது, எப்படியாயினும் அடுத்த நாள் 21 ஆம் திகதி கட்சியின் பொதுக்குழு திருகோணமலையில் கூடிக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கும்.

தெரிவுகளுக்குத் தேர்தல் தவிர்க்க முடியாமல் அமையுமானால் அவையும் அன்று இடம்பெறும். அதன் பின்னர் அடுத்த வாரம் ஜனவரி 27ஆம் திகதி கட்சியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி மாநாடுகள் திருகோணமலையில் நடக்கும்.

அதேசமயம் தேவைப்பட்டால் அன்றைய தினமும் கட்சியின் தற்போதைய பொதுக்குழுவின் அமர்வு ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்படும்.

தொடர்ந்து கட்சியின் தேசிய மாநாட்டை ஒட்டிய பொது அமர்வு அடுத்த நாள் ஜனவரி 28ஆம் திகதி திருகோணமலையில் கோலாகலமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...