2 25
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் தாமரைக் ​கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

Share

பண்டிகைக் காலத்தில் தாமரைக் ​கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் தாமரைக் ​கோபுரம் காலை ஒன்பது மணி தொடக்கம் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்திருக்கும்.

எதிர்வரும் 27ம் திகதி காலை ஒன்பது மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.

மேலும் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் தாமரைக் கோபுரம் அன்றைய தினம் விடியும் வரை திறந்திருக்கும்.

2025ம் ஆண்டின் புத்தாண்டு தினமான ஜனவரி 01ம் திகதி நள்ளிரவு தொடக்கம் அடுத்த நாள் ஜனவரி 02ம் திகதி மத்தியானம் 1 மணிவரை சுமார் 52 மணிநேரங்கள் வரை புத்தாண்டை முன்னிட்டு தாமரைக் கோபுரம் தொடர்ச்சியாக பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...