10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

Share

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமூக ஊடகங்களில் இது தொடர்பிலான பல பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியாரச்சி அண்மையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட ஹர்ஷன, தற்பொழுது நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ரில்வின் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தாம் நாடாளுமன்ற உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ரில்வின் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஒருவர் இந்த வெற்றிடத்திற்காக நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...