2 11
இலங்கைசெய்திகள்

எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை: அநுர தரப்பிலிருந்து எதிரொலித்த குரல்

Share

எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை: அநுர தரப்பிலிருந்து எதிரொலித்த குரல்

புதிய நாடாளுமன்றத்திற்கு போட்டியிடப் போவதில்லை என்றும் அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக தாம் இருப்பதால், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய டில்வின் சில்வா, அரசியலில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண் ஹரிணி அமரசூரிய ஆவார் என்றும் கல்வியுடனும் பரிபூரணத்துடனும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஹரிணி அமரசூரியவை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...