18 15
இலங்கைசெய்திகள்

அரசாங்க சேவையை மறுசீரமைப்பதில் டில்வின் சில்வா தலையீடு

Share

அரசாங்க சேவையை மறுசீரமைப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக அரசாங்க சேவையின் முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அண்மையில் சந்திப்பொன்றை நடத்தி, இது தொடர்பில் டில்வின் சில்வா கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் அரசாங்க சேவையின் பலம்மிக்க 18 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் திட்டங்களை தங்குதடையின்றி முன்னெடுக்கும் வகையில் அரசாங்க சேவையில் மறுசீரமைப்பொன்றை ஏற்படுத்துதல், முக்கிய பதவிகளில் தங்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறித்த செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்த தொழிற்சங்கப் பிரநிதிகளும் உறுதியளித்துள்ளனர்.

அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் அரசாங்க சேவையில் பாரிய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை டில்வின் சில்வா வகுத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...