2 26
இலங்கைசெய்திகள்

ஆட்சி அமைக்க தடை ஏற்படுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரில்வின்

Share

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் தடையினை ஏற்படுத்தினால், அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் எதிர் தாக்கங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விருப்பத்திற்கிணங்க அதிகாரம் அமைய வேண்டும் என்றும், அதில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆட்சி அமைக்க தடை ஏற்படுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரில்வின் | Government Wars Oppostition

இந்த உள்ளூராட்சி தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியே எனவும் நாம் 267 சபைகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதில் 120 இடங்களில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சபைகள் அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 32 சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் பிரச்சினை இல்லாமல் சபைகள் அமைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“சமகாலத்தில் சில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு, தற்போது இணைந்து சபைகள் அமைக்க முயற்சி செய்வது ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சபை அமைப்பைத் தடுப்பதை நிறுத்த வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 14 சபைகள் பெற்றிருந்தாலும், அவற்றில் 13 இடங்களில் தனியாக சபைகள் அமைக்க முடியாத நிலைமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் உள்ளதால், பல இடங்களில் அதிகாரம் அமைப்பது அரசாங்கத்திற்கே சாதகமாக உள்ளது எனவும் கொழும்பு மாநகர சபையில் 11 ஆசனங்கள் போதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சுயேட்சைக் குழுக்களுடனும் பிற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...