8 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக விபத்தில் காலை இழந்த முச்சக்கர சாரதி

Share

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக விபத்தில் காலை இழந்த முச்சக்கர சாரதி

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற பயத்தில் தனது முச்சக்கர வண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையம் சென்ற முச்சக்கர சாரதியொருவர், விபத்தொன்றில் இருகால்களையும் இழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வௌ்ளிக்கிழமை(28) இரவு 10.30 மணியளவில் இரத்தினபுரி அருகே நடைபெற்றுள்ளது.

இரத்தினபுரி, ஹிதல்லன பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இருகால்களையும் இழந்துள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டிக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர் முச்சக்கர வண்டியில் எரிபொருள் நி​ரப்பு நிலையமொன்றை நாடி வந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வரிசையில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி நின்றிருந்த நிலையில், கவனயீனமாக செலுத்தப்பட்ட கார் ஒன்றினால் மோதுண்ட நிலையில், முச்சக்கர வண்டி சாரதி இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவரது இரண்டு கால்களும் நசுங்கிப் போயிருந்த நிலையில், வேறு வழியின்றி வெட்டியகற்றப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...