rtjyd scaled
இலங்கைசெய்திகள்

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் மூவர் கைது

Share

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் மூவர் கைது

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (06.12.2023) வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கி வீட்டில் இருந்த நகை,பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் நாளை (09.12.2023) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...

17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...