24 6658c87f2b64c
இலங்கைசெய்திகள்

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை

Share

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை

கம்பகா (Gampaha)யக்கல பிரதேசத்தில் தனியார் வகுப்பிற்குச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவர்கள் நேற்று (29) மாலை முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவித்தனர்.

யக்கல காவல்துறையினருக்கு இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கிடைத்ததுடன் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவர்களின் தாய்மார்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பகா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நண்பர்கள் எனவும், இவர்கள் மூவரும் நேற்று (29) இரவு வரை வீட்டுக்கு வரவில்லை எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காணாமற்போன மூன்று மாணவர்கள் தொடர்பில் இன்று (30) வரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை யக்கல மற்றும் வீரகுல காவல் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...