tamilni 362 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் டெங்கு நோய் : மூவர் உயிரிழப்பு

Share

அதிகரிக்கும் டெங்கு நோய் : மூவர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தில் மாத்திரம் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, யாழ்ப்பாணத்தில் 1,602 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 1,536 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 637 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களது பங்களிப்பு குறைவாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...