9 14
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

Share

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

தபால் மூல வாக்களிப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பல அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே அவ்வாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டின் பிரதானி சட்டத்தரணி திலின பெர்னாண்டோவினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோரிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவில் செல்வாக்கு செலுத்துவது தேர்தல் விதிகளை மீறும் செயல் என்பதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...