இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

Share
9 57
Share

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை(seeman) ஆதரிப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்(thirumavalavan) கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில்(chennai) இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள். பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.

பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள். பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர். அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்ததுண்டா?

பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார். இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...