இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு

Share

இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு

நாடளாவிய ரீதியிலுள்ள சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.

இறைச்சி, மீன், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அந்த நிவாரணத்தை மோசடி வியாபாரிகள் நுகர்வோருக்கு வழங்காத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில வியாபாரிகள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களுக்குத் தன்னிச்சையான விலையை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் எவ்வளவு குறைக்கப்பட்டாலும் நுகர்வோர் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்காது எனவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டபபட்டுள்ளது.

சந்தையில் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதுடன், சில மரக்கறிகள் 250 கிராம் 80, 120 ரூபா போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய மீன்களின் விலை 1000, 1500 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...

images 17
செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் அகப்பட்டு நீர்கொழும்பில் இருவர் உயிரிழப்பு

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....

25 692d73f8ae775
செய்திகள்இலங்கை

முத்தயன்கட்டு வெள்ளத்தில் சிக்கிய ஏழு விவசாயிகளும் சிறுவனும் பத்திரமாக மீட்பு: கடற்றொழிலாளர்கள் குழு மனிதாபிமான உதவி!

முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில்...

images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...