rtjy 21 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்!

Share

கோட்டாபயவை கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்!

“இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும். என தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் “கோட்டா கோ ஹோம்” என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது.

“ரணில் கம் பெக்” என்பது திரைமறைவில் இடம்பெற்று வந்தது. 2ஆவது போராட்டம் “ரணில் கோ ஹோம்” என வராது. அது வேறு வடிவில் வரும்.

அதாவது, ரணில் ஆட்சியில் இருக்கும்போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும். பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும்.

மக்கள் உணவுகளைக் கொள்ளையடிக்கலாம், சுப்பர் மார்க்கெட்டிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம். செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.

உணவை எப்படிப் பதுக்குவது, அதன்மூலம் எப்படி போராட்டத்தை ஏற்படுத்துவதென்பது எல்லாம் சி.ஐ.ஏ. புத்தகத்தில் உள்ளது. விக்டோரியா நூலண்டால் (அமெரிக்க இராஜதந்திரி) இயக்கப்படும் போராட்டத்தின் 2ஆவது பாகமாகவே இது இருக்கும்.

முதலாவது போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கொலை செய்துவிட்டு லிபியாவில் போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது.

அது சரிவரவில்லை. அதனால்தான் தற்போது அடுத்த திட்டம் வருகின்றது. முதலாவது போராட்டத்தின்போது இருப்பவர்கள் வீதிக்கு வந்தனர். 2 ஆவது போராட்டத்தில் விவசாயிகள், வேலை இழந்தவர்கள் எனப் பலரும் வருவார்கள்.

முதலாவது போராட்டத்தின்போதும் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு இருந்தது. அவர் மட்டுமே போராட்டக் களத்துக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.

அமெரிக்கத் தூதுவருக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியுள்ளார்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு வடக்கில் எப்படி 100 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன. லிபியாவில் இடைக்கால அரசு அமைந்தபோது இராணுவத் தளபதிகள் உள்வாங்கப்பட்டனர். இலங்கையில் அவ்வாறு நடந்திருந்தால் பொன்சேகாவும் இடைக்கால அரசியல் இருந்திருப்பார்.

2ஆவது போராட்டத்துக்கும் பொன்சேகா பயன்படுத்தப்படலாம். எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும். நீர் இல்லை. வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...