24 66529ca6c5ba0
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Share

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி சில கிராமங்கள் மற்றும் நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டாலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு நிலை அதிகரிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக மழையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதால் எவ்வித நன்மையும் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்த நாட்களில் அடை மழை பெய்து வருகின்ற போதிலும், களனி ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை மற்றும் நோர்டன்பிரிட்ஜ் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வெளியேற்றும் மட்டத்தை எட்டவில்லை.

மகாவலி நீர்த்தேக்கங்களின் விக்டோரியா, ரந்தெனிகல, கொத்மலை மற்றும் மொரகஹகந்த ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவும் குறைவாகவே காணப்படுவதாக அவர் கூறினார்.

வளவ ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குச் சொந்தமான உடவளவ மற்றும் சமனலவெவ நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நீர்த்தேக்கங்களில் விக்டோரியா மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவும் குறைவாக காணப்படுவதுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாரிய நீர்த்தேக்கங்கள் நிரம்புவதற்கு போதிய மழைவீழ்ச்சியை இதுவரை பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...

qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...

images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில்...

da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...