24 6636fc6820edc
இலங்கைசெய்திகள்

பதுளை பகுதியில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை!

Share

பதுளை பகுதியில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை(Badulla) – கரந்தகொல்ல பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் உமா ஓயா திட்டத்தினால் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ல – கரந்தகொல்ல மற்றும் மலித்தகொல்ல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மண்சரிவுக்கும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்துக்கு தொடர்பு உள்ளதாக கரந்தகொல்ல பிரதேச மக்கள் குற்றம் சுமத்திவந்தனர்.

இதனையடுத்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...