நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது

Share

நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது

நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு பணியாற்றும் சமையல்காரர் ஒருவர் நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (04.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை ஒன்றை திருடி எடுத்துச் செல்ல முற்பட்ட போதே குறித்த சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான சமையல்காரர் தனது பணியை முடித்து, ​​நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலில் சென்றபோது அவர் வைத்திருந்த பையை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது நாடாளுமன்றத்தின் சமையலறையில் இருந்து ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை என்பன திருடப்பட்டு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற சமையலறையில் இருந்து உணவு பொருட்களை எடுத்துச் சென்ற பல ஊழியர்கள் நாடாளுமன்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

bts pictures 0ynzwrpbewd63qlf
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...